டாஸ்
இதில் இந்திய கேப்டன் கோலி டாஸ் வென்றார். டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய முடிவு செய்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து, அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற கோலி திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன அதிர்ச்சி
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு இருக்கிறது. புவனேஷ்வர்குமாருக்கு பதில் தற்போது முகமது ஷமி களமிறங்கி உள்ளார். இந்த நிலையில் போட்டியின் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி மிகவும் நிதானமாக ஆடி வருகிறது.
ரோஹித் அவுட்
போட்டியின் தொடக்கத்தில் மிகவும் பொறுமையாக பந்துகளை குடித்துக் கொண்டு இருந்தார் ரோஹித் சர்மா. 10 பந்துகளை பிடித்த அவர் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதன்பின் எல்லோரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முஜீப் உர் ரஹ்மான் ஓவரில் அவுட்டானார்.
அவுட்
முஜீப் உர் ரஹ்மான் ரோஹித் களத்திற்கு வந்ததும் சரியாக கேரம் பால் போட்டார். அஸ்வின் ஸ்டைலில் பந்தை இறக்கிய முஜீப் உர் ரஹ்மான் ரோஹித்தை நிலை குலைய வைத்தார். நேராக வந்த பந்து, மிக மிக தாமதம் ஆப் ஸ்டம்ப் பக்கம் திரும்பியது. இந்த லேட் ஸ்பின்னை கொஞ்சம் கூட ரோஹித் எதிர்பார்க்கவில்லை.அவர் சுதாரிக்கும் முன் பந்து திரும்பி ஆப் ஸ்டம்பில்பட்டது.
விக்கெட் விழுந்தது
இதனால் ரோஹித் இன்று 200 ரன்கள் அடிக்கும் கனவும் களைந்து போனது. இந்த விக்கெட் காரணமாக தற்போது இந்திய அணி நித்தனாமாக் ஆடி வருகிறது. 9 ஓவருக்கு வெறும் 36 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்து இருக்கிறது.