For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது எங்கள் மண்.. கோப்பை எங்களுக்குத்தான்.. வெறியோடு 397 ரன்களை குவித்த இங்கிலாந்து.. எப்படி நடந்தது?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று தீராத ஆசையில் இங்கிலாந்து அணி தீவிரமாக விளையாடி வருகிறது.

Recommended Video

WORLD CUP 2019 ENG VS AFG | மார்கனின் ஆட்டத்தால் இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று தீராத ஆசையில் இங்கிலாந்து அணி தீவிரமாக விளையாடி வருகிறது.

அவர்களுக்கு இருப்பது ஆசை அல்ல.. வெறி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த முறைதான் இங்கிலாந்து அணியில் வீரர்கள் எல்லோரும் தங்கள் வாழ்நாள் பார்மில் இருக்கிறார்கள். கையில் கிடைக்கும் அணியை எல்லாம் துவைத்து தொங்க போட்டுகொண்டு இருக்கிறார்கள்.

ஆசைப்பட்டது போலவே சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. இதை விட்டால் இங்கிலாந்து அணிக்கு கோப்பை வெல்ல வேறு ஒரு சாதகமான சூழ்நிலை அமையாது.

நேற்று போட்டி

நேற்று போட்டி

நேற்று இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையில் போட்டி நடந்தது. வீரர்கள் காயத்துடன் தவித்தால் கூட இந்திய அணி ஒரு போட்டியில் கூட இன்னும் தோல்வி அடையவில்லை. ஆனால் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. இது அந்த அணிக்கு பெரிய வருத்தத்தை தந்தது. இதே வருத்தம், கோபம் அனைத்தையும் இன்று கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் மேல் காட்டினார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்.

அதிரடி

அதிரடி

முதலில் களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் மெதுவாக ஆடிவிட்டு பின் 31 பந்தில் வெறும் 26 ரன்களுடன் வெளியேறினார். அவர் அப்படி அவுட்டான பின்தான் ஆட்டத்தில் சூடுபிடிக்க தொடங்கியது. பிரைஸ்டோவும், ஜோ ரூட்டும் களமிறங்கி அதிரடி காட்ட தொடங்கினார்கள். சிக்கிய பந்துகளை எல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என்று பறக்கவிட்டார்கள்.

சூப்பர்

சூப்பர்

அதிரடியாக ஆடிய பிரைஸ்டோ 90 மற்றும் ரூட் 88 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டார்கள். அதன்பின் களமிறங்கினார் அதிரடி மன்னன் இயான் மோர்கன். இவர் களமிறங்கிய பின் போட்டியின் போக்கே மொத்தமாக மாறியது. சின்ன பசங்கடா என்று ஆப்கானிஸ்தான் போட்ட பந்துகளை எல்லாம் மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டார்.

பாவம் ரஷீத்

பாவம் ரஷீத்

பாவம் ரஷீத் கான்.. எப்படி இருந்த மனுஷன் என்ற வசனம் இவருக்குத்தான் நேற்று சரியாக இருந்திருக்கும். நேற்று மோர்கன் பேட்டிங்கில் அதிகம் அடி வாங்கியது ரஷீத் கான்தான். 9 ஓவர் போட்ட ரஷீத் கான் 110 ரன்களை விட்டுக்கொடுத்து மிக மிக மோசமான சாதனையை செய்தார். இவரை நேற்று இயான் மோர்கன் அடித்து துவைத்து வெளுத்தார்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

மோர்கன் நேற்று மட்டும் 17 சிக்ஸர், 4 பவுண்டரி அடித்தார். ஒருநாள் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் அடித்த அதிக சிக்ஸ் இதுதான். அதன்பின் 148 ரன்கள் இருக்கும் போது மோர்கன் தனது இன்னிங்க்ஸை முடித்துக் கொண்டு நைப் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

செம பாஸ்

செம பாஸ்

அதன்பின் கடைசியில் வந்த மெயின் அலியும் 9 பந்தில் 4 சிக்ஸர் அடித்து 31 ரன்கள் அடித்தார். இதனால் அந்த அணி மொத்தம் 50 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 397 ரன்கள் எடுத்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இங்கிலாந்து அணிக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

செம வெற்றி

செம வெற்றி

அதன்பின் அதற்கு அடுத்து இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தொடக்கத்தில் இருந்தே திணறியது. அப்படி இப்படி அடித்து ஆடி கடைசியாக 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் ஹசமத்துல்லா மட்டும் 100 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Story first published: Wednesday, June 19, 2019, 11:05 [IST]
Other articles published on Jun 19, 2019
English summary
ICC World Cup 2019: How England took 397 runs against Afghanistan in yesterday match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X