அவுட்டானார்கள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் 1 ரன்னில் அவுட்டானார். முஜீப் உர் ரஹ்மான் ரோஹித் களத்திற்கு வந்ததும் சரியாக கேரம் பால் போட்டார். நேராக வந்த பந்து, மிக மிக தாமதம் ஆப் ஸ்டம்ப் பக்கம் திரும்பியதில் ரோஹித் சர்மா அவுட்டானார்.
கே எல் ராகுல் மோசம்
அதன்பின் கே எல் ராகுல் பொறுப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் சரியாக ஆடவில்லை. கே எல் ராகுல் நபி போட்ட சூழலில் ஒரு மோசமான ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சி செய்தார். அழகாக வந்த பந்தை ஸ்வீப் அடிக்க முயற்சி செய்து தேவையில்லாமல் அவர் அவுட்டானார்.
இன்னொருவர்
அதேபோல் அதன்பின் நிதானமாக ஆடிய விஜய் சங்கரும் ரஹ்மத் சூழலில் சிக்கினார். அழகாக லெக் ஸ்டம்பை நோக்கி வந்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 41 பந்தில் 29 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன சாதனை
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா இதுவரை ஆடிய 3 லீக் ஆட்டங்களில் எப்போதும் ஸ்பின் பவுலிங்கில் அவுட் ஆனது இல்லை. 3 போட்டியில் இந்தியா மொத்தமாக 53 ஸ்பின் ஓவர்களை பிடித்துள்ளது. இதில் 339 ரன்களை எடுத்து இருந்தது. ஆனால் ஒரு விக்கெட் கூட விழவில்லை. தற்போது அந்த அழகான மகுடத்தை ஒரே போட்டியில் இழந்து இருக்கிறது ஒரே போட்டியில் இந்தியா வருசையாக் ஆப்கான் ஸ்பின் பவுலர்களிடம் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து இருக்கிறது.