
போட்டி
இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜானி பிரைஸ்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினார். முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார்.

விக்கெட் விழுந்தது
இதில் முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தது. முதல் பாலில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அதன்பின் இரண்டாவது பந்திலேயே விக்கெட் விழுந்தது. ஜானி பிரைஸ்ஸ்டோ தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.

எப்படி நடந்தது
ஜானி டக் அவுட்டானர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் களமிறங்கிய உடன் தாஹிர் மிக கடுமையான ஸ்விங் பால் ஒன்றை போட்டார். பொதுவாக ஸ்விங் பந்துகளில் ஜானிக்கு ஆடுவது கடினமாக இருக்கும். இதில் சொதப்பிய அவரின் பேட்டில் பந்து பட்டு, டீ காக் கையில் விழுந்தது.

முதல் விக்கெட்
இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழத்தியவர் என்ற பெயரை தாஹிர் பெற்றுள்ளது. இந்த சந்தோஷ மிகுதியில் அவர் வேகமாக பவுண்டரியை நோக்கி ஓடினார். அவர் எப்போது விக்கெட் எடுத்தால் தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு வரை ஓட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி எப்படி
முதலில் இவர் மிக மோசான் பார்ம் அவுட்டில் தவித்து வந்தார். 30 வயது தாண்டிய பின் இவர் கொஞ்சம் கூட சரியாக விளையாடவில்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங் அணிக்கு வந்த பின்தான் இவர் பார்மிற்கு வந்தார். தற்போது இதன் மூலம் விக்கெட் எடுத்துள்ளார்.

தோனி ஏன்
இவரின் இந்த பாரிற்கு பின் தோனி ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு போதிய நம்பிக்கை வழங்கி தோனிதான் அவரின் ஆட்ட முறைகளை மாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அது அவரின் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது.


Click it and Unblock the Notifications