ஆனால் இல்லை
ஆனால் தோனி இன்னும் ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. தற்போது வரை அதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அவர் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே எப்படி
அதேபோல் தோனி சிஎஸ்கே அணியில் இருந்தும் விலக போகிறார். மொத்தமாக ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெறுவார். சிஎஸ்கே அணி நிர்வாகிகளில் ஒருவராக அவர் செயல்படுவார் என்றும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது.
விளக்கம்
தற்போது இதற்கு சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் பதில் அளித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சென்னை அணி நிர்வாகி, சிஎஸ்கே அணியில் இப்போது மாற்றம் எதுவும் செய்யும் எண்ணம் இல்லை. அம்பதி ராயுடு மட்டும் சென்னை அணியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு மாற்று தேடுகிறோம்.
கண்டிப்பாக ஆடுவார்
கண்டிப்பாக அடுத்த வருடம் தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடுவார். அவர் அணியில் இருப்பது உறுதி. அவர்தான் அடுத்த வருடமும் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்படுவார். அவர் ஓய்வு என்று வெளியாகும் செய்திகள் எல்லாம் வதந்தி, என்று குறிப்பிட்டுள்ளார்.