அவுட்
இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக இந்த போட்டியில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். கோலி, ரோஹித், ஜடேஜா ஒரு ரன்களில் அவுட்டானார்கள். தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். பண்ட் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மிக மோசம்
பண்ட் பாண்டியா மட்டும் கொஞ்சம் ஜோடி போட்டு ஆடினார்கள். ஆனால் அவர்களும் தேவை இல்லாத ஷாட்களை இடை இடையே அடித்து ஆடினார்கள். இதனால் அந்த ஜோடியும் பிரிந்தது. அதன்பின் இந்திய அணியை தோனி வந்தால் மட்டும்தான் காப்பற்றுவார் என்ற நிலை ஏற்பட்டது.
அவர்கள் வந்தனர்
அப்போதுதான் இந்திய அணியில் ஜடேஜா மற்றும் தோனி இருவரும் ஜோடி போட்டு ஆட தொடங்கினார்கள். 2011களில் இந்திய அணி ஆடியது போல மிகவும் பொறுமையாக ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். ஒரு பக்கம் ஜடேஜா அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் தோனி பொறுமையாக ஆடினார்.
செம
ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களால் இந்தியாவின் பக்கம் தற்போது திரும்பி வருகிறது. முக்கியமாக ஜடேஜா 3 சிக்ஸர், 3 பவுண்டரி என்று அரை சதம் அடித்துள்ளார். இவர் ஒவ்வொரு முறை சிக்ஸ் அடிக்கும் போதும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முகம் அப்படியே மாறியது. சில பவுலர்கள் டென்ஷனில் கத்த தொடங்கினார்கள்.
நம்பிக்கை இருக்கிறது
இவர்கள் இருவரும் தற்போது களத்தில் இருப்பதால் ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நியூசிலாந்து இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விட்டார்கள். இன்னும் சிஎஸ்கேவை அவர்களால் வீழ்த்த முடியவில்லை.