
என்ன ஸ்கோர்
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிகவும் நிதானமாக ஆடியது. நியூசிலாந்து அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது.

விக்கெட்
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆட முயன்றது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த அணி திணற தொடங்கியது. முக்கியமாக ஹென்றி வீசிய ஸ்பெல்லை சமாளிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் ராய் மற்றும் பிரைஸ்டோ இருவரும் திணறினார்கள்.

விக்கெட்
இந்த நிலையில் ஹென்றி வீசிய 6வது ஓவரில் பவுன்சர் பந்து ஜேசன் ராய் பேட்டில் எட்ஜாகி சரியாக கீப்பர் லதாம் கையில் போய் தஞ்சம் அடைந்தது. ஆனால் பந்து பேட்டில் பட்டதா என்று நடுவருக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர் மூன்றாவது நடுவரிடம் சந்தேகம் கேட்டார். இதனால் அவர் ஜேசன் ராயை நிற்கும்படி கூறினார்.

இல்லை
ஆனால் ஜேசன் ராய் அங்கு நிற்கவில்லை. அதே போல நடுவரை அவர் கோபமாக திட்டவும் செய்தார். கோபமாக அவரிடம் எதோ சொல்லிவிட்டு ராய் வேகமாக மைதானத்தை விட்டு சென்றார். பின் ரிப்ளேயில் ராய் அவுட்தான் என்பது தெளிவாக தெரிந்தது. ராய் நடுவரிடம் இப்படி கோபம் அடைந்த சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.இவருக்கு இந்த போட்டி முடிந்த பின் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











