ஷமி எப்படி
புவனேஷ்வர்குமார்தான் பிசிசிஐயை பொறுத்தவரை பும்ராவிற்கு ஜோடி. இவர்களை இருவரையும் களத்திற்கு அனுப்பவே எப்போதும் பிசிசிஐ நினைக்கிறது. முதல் நான்கு போட்டிகளிலும் இதே இணைத்தான் பந்து வீசியது. அதன்பின் பாகிஸ்தான் போட்டியில்தான் புவனேஷ்வர்குமார் காயம் காரணமாக வெளியேறினார்.
என்ன சிக்கல்
அதன்பின் வந்த ஷமி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள், இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் என்று விக்கெட்டுகளை குவித்து வருகிறார்.
ஆனால் என்ன
ஆனாலும் ஷமி மீது கோலி உட்பட அணி நிர்வாகம் பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை. இதற்கு அவர் அதிக ரன் கொடுப்பது காரணமா, சரியாக டெத் ஓவர்களை வீசாதது காரணமா என்பது தெரியவில்லை. இதனால் ஷமிக்கு இந்திய அணியில் போதிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற புகார் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
இன்றும் நடந்தது
அது இன்றும் வெளியில் தெரிந்தது. ஆம் இன்று மூன்று ஸ்பீட் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் புவனேஷ்வர் குமார், பும்ராவிற்குத்தான் தொடக்க ஓவர்களை வீசி வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் 6 ஓவர்களை இவர்கள் இருவரும் மாறி மாறி வீசினார்கள். ஆனால் இவர்கள் ரன் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், விக்கெட்டும் எடுக்கவில்லை.
ஆனால் எப்போது
ஆனால் 7வது ஓவரில்தான் ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஓவரை அவர் மிகவும் சிறப்பாக வீசினர். அதன்பின் அதற்கு அடுத்து இவர் போட்ட 9வது ஓவரிலேயே விக்கெட் எடுத்தார். நிதானமாக ஆடிக்கொண்டு இருந்த தமீம் இக்பாலை கிளீன் போல்ட் செய்தார்.
எத்தனை போட்டிகள்
இவருக்கு முன்பே ஓவர் கொடுத்து இருந்தால் தொடக்கத்திலேயே அவர் விக்கெட் எடுத்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் கோலி அதை செய்யவில்லை. இங்கிலாந்து போட்டியிலும் இடையில் 15 ஓவர் வரை ஷமிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.