என்ன பேட்டி
உலகக் கோப்பை போட்டிக்கு முன் 10 அணிகளை சேர்ந்த கேப்டன்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அவர்களிடம் உலகக் கோப்பை தொடர் குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது . அணியின் பலம் எப்படி, அணியின் திட்டங்களை என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார்கள்.
என்ன கேள்வி
இந்த நிலையில் இதில் கோலியிடம் இங்கிலாந்து பிட்ச் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் இங்கிலாந்து பிட்ச் எல்லாம் பேட்டிங் பிட்சாக மாற்றப்பட்டு இருக்கிறது. இங்கு பவுலர்கள் எளிதாக 350+ ரன்களை கொடுக்கிறார்கள். அதை எளிதாக இரண்டாவது இன்னிங்ஸ் பிடிக்கும் அணி சேஸ் செய்து விடுகிறது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த கோலி ஆம் இப்போது மைதானம் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கிறது. ஆனால் இது போக போக மாறும். அதே சமயம் இது உலகக் கோப்பை. இதில் போக போக விறுவிறுப்பு அதிகம் ஆகும். அப்படிப்பட்ட நேரத்தில் பெரிய ஸ்கோர்களை எடுப்பது மிகவும் கடினம். பெரிய ஸ்கோர்களை சேஸ் செய்வது கடினமாக இருக்கும். 250 ரன்களை எடுப்பதே கடினம் என்று அப்போது கோலி கூறினார்.
மிக சரி
அப்போது கோலி எதை வைத்து அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் கடைசியாக உதாரணமாக சமீபமாக நடந்த இங்கிலாந்து இலங்கை போட்டியில் இலங்கையின் 232 ரன்களை இங்கிலாந்தால் எடுக்க முடியவில்லை, இந்தியாவின் 224 ரன்களை ஆப்கானிஸ்தானால் எடுக்க முடியவில்லை. அதேபோல் நியூசிலாந்தின் 291 ரன்களை மேற்கு இந்திய தீவுகளால் எடுக்க முடியவில்லை.
வாவ்
இதனால் கோலி எப்படி இவ்வளவு துல்லியமாக கணித்தார். கோலி எப்படி போட்டிகளை சரியாக உணர்ந்து இருக்கிறார். இந்த திறமையை அவர் எங்கிருந்து பெற்றார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.