மழை
போட்டி நடந்த மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானம் முதல்நாள் பேட்டிங் பிடிக்க சாதகமாக இருந்தது. அதாவது நியூசிலாந்து பேட்டிங் செய்த செவ்வாய் கிழமை, பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலை நிலவியது. ஆனாலும் இந்திய அணியின் சிறப்பான பவுலிங் காரணமாக பெரிய அளவில் அன்று ரன் செல்லவில்லை.
நேற்று என்ன
ஆனால் நேற்று பிட்ச் மொத்தமாக பவுலிங் பிட்சாக மாறி இருக்கிறது. பிட்ச் காயும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மழை காரணமாக பிட்ச் காயவில்லை. இதனால் பிட்ச் முழுக்க முழுக்க பவுலிங் பிட்சாக மாறியது.
இரவு மழை
இரவு முழுக்க நேற்று முதல் நாள் மான்செஸ்டரில் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பிட்ச் காயாமல் இருந்துள்ளது. இரவு முழுக்க மழை பெய்யாமல் இருந்திருந்தால், பிட்ச் காலையில் இந்தியா பேட்டிங் செய்யும் போது காய்ந்து பேட்டிங் செய்ய வசதியாக மாறி இருக்கும். ஆனால் மழை இந்தியாவிற்கு எதிராக கடுமையாக சதி செய்தது.
மிக மோசம்
இது நேற்று நியூசிலாந்து பேட்டிங் செய்த கடைசி நான்கு ஓவரிலேயே தெரிந்தது. அந்த கடைசி நான்கு ஓவரில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அதேதான் இந்திய அணி பேட்டிங் செய்யும் போதும் தொடர்ந்தது. ஆனால் போக போக பிட்ச் கொஞ்சம் காய்ந்ததால் பேட்டிங் செய்ய வசதியாக இருந்தது.
வெற்றி வாய்ப்பு
அதுதான் ஜடேஜா, தோனி பேட்டிங் செய்யும் போது இந்திய அணிக்கு உதவியது. ஒருவேளை நேற்று முதல் நாள் இரவு மழை பெய்யாமல் இருந்து, பிட்ச் கொஞ்சம் சீக்கிரமே காய்ந்து இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா சரியாக பேட்டிங் செய்து, வென்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.