என்ன பயிற்சி
மழை காரணமாக வீரர்கள் பெரிய அளவில் வெளியில் பயிற்சி எடுக்க முடியவில்லை. பெரும்பாலும் வீரர்கள் உள் அரங்கில்தான் தங்கள் பயிற்சியை மேற்கொண்டார்கள். சில மணி நேரம் மட்டும் இரண்டு நாட்டு வீரர்களும் வெளியே மைதானத்தில் பயிற்சி செய்தார்கள்.
|
சூப்பர்
இந்த நிலையில் வெளியே பயிற்சி செய்யும் போது தோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் பயிற்சி அளித்தார். நீண்ட நேரம் இவர்கள் இருவருக்கும் தோனி பயிற்சி அளித்தார். கீப்பிங்கில் அவர் பயன்படுத்தும் டெக்னீக்குகளை சொல்லிக் கொடுத்தார்.
|
பண்ட் எப்படி
தினேஷ் கார்த்திக் பயிற்சி முடித்து சென்ற பின், பண்ட் தொடர்ந்து தோனியிடம் பயிற்சி மேற்கொண்டார். அவரிடம் நிறைய கேள்வி கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்டார். தோனிதான் பண்டிற்கு ரோல் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது . தோனி செய்யும் காரியங்களை பண்ட் பலமுறை செய்ய முயற்சி செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
வைரலாகி உள்ளது
தற்போது இவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி எப்படியும் ஓய்வு பெறுவார். அதன்பின் அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் ஒருவர் களமிறங்கி விளையாடுவார்கள். அதனால், இந்த புகைப்படம்தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணியின் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.