என்ன மாற்றம்
இந்திய அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டு இருக்கிறார். கடந்த மூன்று போட்டிகளில் இவர் இந்திய அணிக்காக விளையாடினார். நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடிய இவர் தொடர்ந்து சொதப்பி வந்தார். முக்கியமாக மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இவர் மோசமாக விளையாடினார். இதனால் இவர் நீக்கப்பட்டுள்ளார்.
அணிக்குள் வந்தார்
இதனால் தற்போது இந்திய அணிக்குள் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு சொந்த ஊர் ஹரித்வார் ஆகும். இவருக்கு தற்போது 21 வயதுதான் ஆகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஒருநாள் போட்டியில் இதுவரை இவர் சதமோ அரைசதமோ அடித்தது இல்லை.
ஆனால் என்ன
ஆனால் ஐபிஎல் போட்டிகளில் இவர் மிகவும் சிறப்பாக ஆடினார். டெல்லி அணிக்காக இவர் மிகவும் அதிரடியாக ஆடினார். அதனால் தற்போது இவருக்கு அணிக்குள் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இவர் வந்த பின் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவேற்பு
இன்று ரிஷப் பண்ட் பெயரை சொன்னதும் மைதானமே அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது. தோனியின் பெயரை சொன்னால் எப்படி ரசிகர்கள் கத்துவார்களோ அதே அளவிற்கு சமமாக ரிஷப் பண்ட் பெயரை கேட்டதும் ரசிகர்கள் கத்தினார்கள். இவர் வந்ததால் அணிக்கு புதிய பலம் கிடைக்கும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.