என்ன நடந்தது
அப்போது ரோச் போட்ட பந்து ரோஹித்தின் காலுக்கும் பேட்டிற்கும் இடையில் சென்றது. இதற்கு ரோச் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் மேற்கு இந்திய தீவுகள் ரிவ்யூ கேட்டது. பந்து சரியாக பேட்டிற்கும் காலிற்கும் இடையில் சென்றது. அதே சமயம் பேட் மற்றும் கால் இரண்டுக்கும் இடையில் பந்து செல்லும் போதும் அதிர்வு ஏற்பட்டது. மூன்றாவது நடுவர் ரோஹித்திற்கு விக்கெட் கொடுத்தார்.
ஆனால் என்ன
பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறி கோலி ரோஹித்திற்கு விக்கெட் கொடுத்தார். ஆனால் பந்து உண்மையில் பேட்டில் படவில்லை. பந்து காலில்தான் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இதை பார்த்து ரோஹித் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏன் கோபம்
இந்த நிலையில் இது தொடர்பாக ரசிகர்கள் பலர் டிவிட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் கோபமாக கமெண்ட் செய்து இருந்தனர். ரோஹித் சர்மாவிற்கு கொடுக்கப்பட்ட விக்கெட் விக்கெட்டே கிடையாது. வர வர மிக மோசமாக நடுவர்கள் செயல்படுகிறார்கள். ஐசிசி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட் செய்து வருகிறார்கள்.
|
ரோஹித் சர்மா டிவிட்
தற்போது இதுகுறித்து ரோஹித் சர்மாவே டிவிட் செய்து இருக்கிறார். அவர் தான் விக்கெட் ஆகாத புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அதில் தலையில் அடித்துக்கொள்ளும் மற்றும் கண்ணை உற்று பார்க்கும் எமோஜியை போட்டு ஐசிசியை கிண்டல் செய்து இருக்கிறார்.
இல்லை
பொதுவாக வீரர்கள் தாங்கள் அவுட் ஆவதை, அதன் சர்ச்சையை இப்படி வெளிப்படையாக டிவிட் செய்ய மாட்டார்கள். ஆனால் ரோஹித் சர்மாவே இப்போது இப்படி செய்து இருக்கிறார். அவர் கோபம் நியாயம்தான் , அவர் போஸ்ட் செய்ததும் நியாயம்தான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.