
முதல் விஷயம்
உலகக் கோப்பைக்கு பின் கண்டிப்பாக தோனி ஓய்வு பெற போகிறார். அவர் இந்த தொடரிலேயே ஓய்வு பெறுவாரா அல்லது மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஓய்வு பெறுவாரா என்பதுதான் தற்போது கேள்வியாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் இவரின் ஓய்விற்கு பின் இந்திய அணிக்குள் தலைமை பதவிக்கான போட்டிகள் கடுமையாக இருக்க போகிறது என்கிறார்கள்.

யார் தலைமை
என்னதான் தற்போது கோலி கேப்டனாக இருந்தாலும், ரோஹித் சர்மா கேப்டனாக முயன்று கொண்டு இருக்கிறார். கேப்டனாக வர வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று இந்த வருட தொடக்கத்தில் ரோஹித் பேட்டி அளித்து இருந்தார். தற்போது உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு அவர் காரணமாகி உள்ளார். இதனால் இந்த தொடருக்கு பின் ரோஹித் சர்மா தலைமை பொறுப்பிற்கு வர கண்டிப்பாக முயற்சி செய்வார்.

பயிற்சியாளர்
அதேபோல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வியும் அதிகமாக எழுந்துள்ளது. இந்திய அணி தற்போது புதிய பயிற்சியாளரை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பை தொடரோடு முடிகிறது. இதன் பின்பே புதிய பயிற்சியாளர் யார் என்பதற்கான பிரச்சனை வெடிக்கும்.

கடைசி
இதெல்லாம் போக வரும் அக்டோபர் மாதம் பிசிசிஐ அமைப்பில் வீரர்கள் தேர்வு கமிட்டி மொத்தமாக கலைக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக புதிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் வந்த பின் அணிக்குள் யார் தேர்வு செய்யப்படுவார்கள், 2020 டி 20 உலகக் கோப்பை போட்டிக்காகக் அணியில் என்ன மாற்றம் எல்லாம் செய்யப்படும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இதனால் அப்போது பல அதிரடி மாற்றங்கள் அணியில் நடக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications