For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் பொறுப்பேற்க போகிறீர்கள்.. சொல்லுங்கள்.. கேள்வி கேட்ட பிசிசிஐ.. முக்கிய வீரர்கள் மீது நடவடிக்கை?

உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து பிசிசிஐ முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க போவதாக தகவல்கள் வருகிறது.

Recommended Video

WORLD CUP 2019 | கேள்வி கேட்ட பிசிசிஐ! முக்கிய வீரர்கள் மீது நடவடிக்கை?- வீடியோ

டெல்லி: உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து பிசிசிஐ முக்கியமான சில நடவடிக்கைகளை அணியில் எடுக்க போவதாக தகவல்கள் வருகிறது.

உலகக் கோப்பை தொடரில் பல்வேறு கனவுகளுடன் இந்திய அணி கலந்து கொண்டது. அதேபோல் இந்திய அணியும் தொடர் முழுக்க சிறப்பாக விளையாடியது.

புள்ளி பட்டியலில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி முதலிடத்தில் இருந்தது. ஆனால் செமி பைனல் போட்டியில் ஆடிய மோசமான ஆட்டம் காரணம் இந்தியா வெளியேற நேரிட்டது.

அன்று நடந்த சிறிய தவறு.. அவர் போனார் எல்லாம் போனது.. கேப்டன் கோலியை அசைத்து பார்த்த அந்த நொடி! அன்று நடந்த சிறிய தவறு.. அவர் போனார் எல்லாம் போனது.. கேப்டன் கோலியை அசைத்து பார்த்த அந்த நொடி!

மீட்டிங் நடக்க உள்ளது

மீட்டிங் நடக்க உள்ளது

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து விரைவில் பிசிசிஐ மீட்டிங் நடக்க உள்ளது. வரும் வாரத்தில் இந்த பிசிசிஐ மீட்டிங் டெல்லியில் நடக்க உள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்த மீட்டிங் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைய கேள்விகள்

நிறைய கேள்விகள்

இந்த சந்திப்பிற்கு முன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவருக்கும் மீட்டிங்கில் பதில் அளிப்பது தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு காரணங்களை பட்டியலிட வேண்டும் என்று இவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அணிக்குள் என்ன நடக்கிறது என்று நிறைய கேள்விகள் இவர்கள் இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

சிக்கல்

சிக்கல்

இந்த உலகக் கோப்பை தொடர்தான் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கடைசி தொடர். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். இதனால் இந்திய அணியின் உலகக் கோப்பை தோல்விக்கு என்ன காரணம், இதற்கு பொறுப்பேற்க போவது யார் என்று இந்த மீட்டிங்கில் விவாதிக்கப்படும்.

சில வீரரால்

சில வீரரால்

கே எல் ராகுல், பண்ட், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடர் முழுக்க சரியாக விளையாடவில்லை. இதனால் இவர்களும் கடுமையான கேள்விகளை எதிர்கொள்ள போகிறார்கள். அணிக்குள் இந்த மீட்டிங்கிற்கு பின் நிறைய மாற்றங்கள் அதிரடியாக நடக்கும் என்று கூறுகிறார்கள். முக்கியமான வீரர்கள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, July 12, 2019, 12:09 [IST]
Other articles published on Jul 12, 2019
English summary
ICC World Cup 2019: What will happen in BCCI officials meet after India's loss in the series?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X