அவுட்
செமி பைனல் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்தியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. இதனால் இந்திய அணி நிர்வாகிகள் மீது பிசிசிஐ அமைப்பு கடும் கோபத்தில் உள்ளது. இந்த வாரம் அணி வீரர்களுடன் பிசிசிஐ நிர்வாகம் ஆலோசனை நடத்த உள்ளது.
இன்னும் 15 நாட்கள்
தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்கலாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம்தான்
இன்னும் 15 நாட்களில் இந்த நீட்டிப்பு முடிகிறது. அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். இதற்காக இப்போதே பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. யாரை நியமிப்பது என்று பிசிசிஐ தீவிர யோசனையில் உள்ளது.
முன்னாள் வீரர்கள்
இதற்காக பிசிசிஐ முன்னாள் இந்திய அணி வீரர்கள் சிலரை பரிசீலனையில் வைத்துள்ளது. கங்குலி காலத்தில் இந்திய அணியில் விளையாடிய வீரர்களை பிசிசிஐ பரிசீலித்து கொண்டு இருக்கிறது. அதேபோல் மற்ற நாடுகளை சேர்ந்த ஜாம்பவான் வீரர்களையும் பிசிசிஐ கருத்தில் கொண்டுள்ளது.
யார் எல்லாம்
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக பின் வரும் நபர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
ராகுல் டிராவிட்
ரிக்கி பாண்டிங்
கங்கலி
வார்னே ஆகியோரில் யாராவது ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.