என்ன மாற்றம்
இந்திய அணியில் கடந்த மூன்று போட்டியிலும் முக்கியமான வீரராக, முக்கியமான கேம் சேஞ்சராக இருந்தவர் முகமது ஷமிதான். புவனேஷ்வர் குமார் காயம் அடைந்த பின் பாகிஸ்தான் போட்டிக்கு பின் ஷமி அணிக்குள் வந்தார். இவர் அணிக்குள் வந்த பின் இந்த அணியின் பவுலிங் அதிக பலம் பெற்றுள்ளது.
எத்தனை விக்கெட்டுகள்
இவர் வரிசையாக இதுவரை 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட் அடக்கம். அதன்பின் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த நிலையில் கடைசியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார்.
ஆனால் என்ன
ஆனால் காயத்துடன் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த புவனேஷ்வர்குமார் தற்போது அணிக்குள் திரும்ப இருக்கிறார். இவர் நேற்றுதான் தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்தார். இவர் காயம் முழுவதுமாக குணமடைந்து உள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக செய்திகள் வருகிறது.
அதிக ரன்கள்
ஷமி அதிக விக்கெட் எடுத்தாலும் நிறைய ரன்களை வாரி வழங்குகிறார். கடந்த போட்டியில் ஷமி வீசிய 8 மற்றும் 9வது ஓவர்களில் 30 ரன்கள் வரை கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் ரேட் அதிக அளவில் உயர்ந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் அப்படி ரன் கொடுக்கும் வீரர் கிடையாது. இதனால் ஷமி அதிக விக்கெட் எடுத்தாலும் புவிக்கே அணியில் சேர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.