என்ன நம்பிக்கை
நேற்று களத்தில் ஜடேஜா தோனி ஆடிய வரை போட்டி இந்தியாவின் வசம் இருந்தது. அதிலும் ஜடேஜா அவுட்டான பின்பும் கூட இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருந்தது. தோனி களத்தில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தருவார் என்ற நம்பிக்கை இருந்தது.
அவுட்டானார்
தோனி தேவையில்லாமல் 48வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தோனி அவுட்டானார். அவர் ரன் அவுட்டான நொடிதான் மொத்தமாக ஆட்டத்தை புரட்டிப்போட்டது.
அட பாவமே
தோனியின் இந்த ரன் அவுட் பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது. சரியாக அந்த நொடிதான் இந்த போட்டி இந்திய அணியின் கையை விட்டு போனது. அவரின் கடைசி உலகக் கோப்பை போட்டியாகும் இது.
முதல் போட்டி
தோனியின் முதல் ஒருநாள் போட்டியும் கூட இப்படித்தான். அவர் ரன் அவுட் மூலம்தான் அவுட்டானார். அந்த ரன் அவுட்டில் இருந்துதான் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. அதுதான் இந்திய அணியின் முகத்தை மாற்றியது. தற்போது அவரின் கடைசி உலகக் கோப்பை போட்டியும் அப்படித்தான் முடிந்துள்ளது.
போன போட்டி
அதேபோல் ஐபிஎல் போட்டியிலும் இந்த முறை கடைசி இறுதிப் போட்டியில் ரன் அவுட் மூலம்தான் தோனி அவுட்டானார். சென்னை அணி வெற்றியின் விளிம்பில் இருக்கும் நொடியில் தோனியை மும்பை அணி ரன் அவுட் செய்தது. அதில் சென்னை தோல்வி அடைந்தது. இப்போது இந்தியா தோல்வி அடைந்துள்ளது.