
என்ன போட்டி
இன்று நடக்கும் போட்டியை இந்தியா இங்கிலாந்து அணிகள் குழந்தைகளின் நலனுக்காக விளையாடுகிறது. ஐசிசி மற்றும் யுனிசெப் இணைந்து இந்த போட்டியை குழந்தைகளின் நலனுக்காக அர்பணிக்கிறது. இதனால் இன்று நடக்கும் போட்டிக்கு #OneDay4Children என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல சுவாரசியமான சம்பவம் நடக்க உள்ளது.

என்ன பணிகள்
இன்று நடக்கும் போட்டிக்கும் முன்பும், பின்பும் இருக்கும் பல பணிகளை பெரியவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் செய்ய இருக்கிறார்கள். அதாவது இன்று குழந்தைகள் மைதானத்தில் வேலை செய்வார்கள். கமெண்ட்ரி செய்வார்கள். அதேபோல் வீரர்களை பேட்டி எடுப்பார்கள். கேமரா மேனுக்கு உதவுவார்கள். இப்படி ஒரு கிரிக்கெட் போட்டிக்கு பின் நடக்கும் பணிகளை எல்லாம் இவர்கள் இன்று செய்ய போகிறார்கள்.
ஆர்வம்
கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் எல்லாம் இதை இன்று செய்ய போகிறார்கள். இதற்கான வீடியோ ஒன்றை இப்போதே ஐசிசி வெளியிட்டு இருக்கிறது. இதனால்தான் இதற்கு #OneDay4Children என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து, அவர்களை மையப்படுத்தி இன்று போட்டி நடக்கிறது.

உடை
இந்த போட்டியில்தான் இந்திய அணி வீரர்கள் புதிய காவி உடையுடன் ஆட இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. அதேபோல் இன்று நடக்கும் போட்டியில் வரும் வருமானத்தை பிசிசிஐ யுனிசெப் அமைப்பிற்கு அளிக்க உள்ளது. இங்கிலாந்து அணியும் தங்கள் வருமானத்தை யுனிசெப் அமைப்பிற்கு அளிக்க உள்ளது. இந்த பணம் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications