விதிகள் என்ன
கடந்த 2016ம் ஆண்டு ஐசிசி சில புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. அந்த விதிகளில் வீரர்கள் நடுவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. விதிகளை மீறும் வீரர்களுக்கு என்ன தண்டனை என்றும் நிறைய புதிய முறைகள் அதில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தற்போது ஐசிசி மிக கடுமையாக கடைப்பிடித்து வருகிறது.
ஆனால் என்ன
ஆனால் இதை இந்திய அணியின் கேப்டன் கோலி கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து மீறி வருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு டீ மெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்தியா ஆப்கானிஸ்தான் இடையில் நடந்த போட்டியில் 29 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அதற்கு நடுவர் அலீம் டெர் விக்கெட் கொடுக்கவில்லை.
என்ன சண்டை
இதனால் கோலி நடுவரிடம் சண்டை போட்டார். நீண்ட நேரம் இந்த சண்டை நடந்தது. நடுவரிடம் சண்டை போட்டதன் மூலம் ஐசிசி விதி எண் 2.1ஐ கோலி மீறி இருக்கிறார். இதனால் அவருக்கு 25% வருமானம் பிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அவரின் மெரிட் புக்கில், ஒரு டீ மெரிட் புள்ளி (கருப்பு புள்ளிகள்) வைக்கப்பட்டு இருக்கிறது.
மீண்டும் சண்டை
இந்த நிலையில் வங்கதேசம் இந்தியா இடையில் நடந்த போட்டியில் ஷமி ஓவரில் ஷாகிப் அல் ஹசன் இன்சைட் எட்ஜ் ஆனார். இது பார்க்க எல்பிடபிள்யூ போல இருந்தது. பேட்டில் பந்து பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதனால் இதற்கு கோலி எல்பிடபிள்யூ என்று விக்கெட் கேட்டார். நடுவர்கள் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை.
சர்ச்சை
இதையடுத்து கோலி ரிவ்யூ கேட்டார். ஆனால் மூன்றாவது நடுவர் இதை சோதித்து பார்த்துவிட்டு விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து கோலி நேராக சென்று நடுவரிடம் வாதம் செய்தார். விக்கெட் ஏன் கொடுக்கவில்லை என்று நீண்ட நேரம் கேட்டார். ஆனால் கோலியை இதற்காக ஐசிசி தண்டிக்கவில்லை. அவருக்கு எதிராக பிளாக் மார்க் எதுவும் செய்யவில்லை.
வார்னிங்
அவரை தற்போது ஐசிசி வார்னிங் மட்டுமே செய்துள்ளது. கோலி இன்னும் இரண்டு டி மெரிட் புள்ளிகளை பெற்றால் தடை பெறுவார். பெரிய தவறுகளை களத்தில் செய்தால் ஒரே நேரத்தில் இரண்டு டி மெரிட் புள்ளிகள் வழங்கப்படும். இதனால் இன்று கோலி மிகவும் கவனமாக ஆட வேண்டும்.
ஏன் இரண்டு
இன்று கோலி இன்னும் இரண்டு டி மெரிட் புள்ளிகளை பெற்றால் வரிசையாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது. இன்று மட்டும் கோலி தவறு செய்தால் செமி பைனல் மற்றும் பைனலில் கோலி விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.