பிரச்சனை
இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க அணிகளுக்கு முக்கிய பிரச்சனையாக இருந்த விஷயம் என்றால் அது மழைதான். ஆம், பல போட்டிகள் இந்த உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. முக்கியமான 4 போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டதும் புள்ளி பட்டியலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது.
செமி பைனல் போட்டி
அதேபோல் இந்தியாவின் செமி பைனல் போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. கடந்த செவ்வாய் கிழமை பெய்த மழையால் போட்டி பாதியில் தடைபட்டது. இதனால் புதன் கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அதில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.
இல்லை
இந்த நிலையில் இன்று உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று லண்டனில் மழை பெய்ய வாய்ப்பில்லை. நல்ல வெயில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. 22 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
அப்படியே நடந்தாலும்
போட்டி முழுக்கவே மழை அச்சுறுத்தல் கிடையாது. லண்டன் முழுக்கவே இன்று நல்ல வெயில் அடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. ஒருவேளை இன்று மழை பெய்தாலும் நாளை மீண்டும் போட்டி விடப்பட்ட இடத்தில் இருந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.