மிர்பூர்: கிரிக்கெட் உலகில் 'சுண்டைக்காய்' அணியாக கருதப்படும் வங்கதேசத்தில் கேவலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தம்மை நீக்கினால் மகிழ்ச்சியே என்று டோணி கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியுடனான இதுவரையிலான 2 போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.

இதனால் இந்திய அணி மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து டோணி கூறியுள்ளதாவது:
{ventuno}
என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினால் இந்திய அணி நன்றாக விளையாடுமெனில் மகிழ்ச்சியோடு விலகிக் கொள்கிறேன். நான் ஒரு சாதாரண வீரராகவே விளையாடிவிட்டு போகிறேன்.
கேப்டன் என்கிற பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அதை எடுத்துக் கொள்ள விரும்பினார்கள் எனில் எடுத்துக் கொள்ளட்டும்.
இவ்வாறு டோணி கூறினார்.