
இம்பேக்ட் விதி என்றால் ?
அதாவது போட்டி தொடங்குவதற்கு முன் 4 மாற்று வீரர்களை ஒவ்வொரு அணியும் அறிவிக்க வேண்டும். இதில் எதாவது ஒரு வீரரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். ஏற்கனவே பிளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரரை ஒரு இன்னிங்சில் 14வது ஓவர் முடிவதற்குள் இந்த இம்பேக்ட் பிளேயரை வைத்து மாற்றலாம். அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும்

எப்போது பயன்படுத்தலாம்
இதே போன்று ஏறகனவே ஆட்டமிழந்த பேட்ஸ்மேனுக்கு பதலாக புது பேட்ஸ்மேனை (14வது ஓவர் முடிவதற்குள்) கொண்டு வரலாம். இதே போன்று ஒரு வீரர் சில ஓவர் வீசிய பிறகு, அவர் பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்தால் 14 வது ஓவருக்கு முன் அவரை மாற்றி வேறு ஒரு வீரரை இம்பேக்ட் பிளேயிராக மாற்றலாம்.

முதலில் டெல்லி அணி
இந்த விதியை நேற்று முதல் முறையாக டெல்லி அணி பயன்படுத்தியது., 27 பந்துக்கு 47 ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் ஹித்தேன் தலால்க்கு பதிலாக ஹிரித்திக் சோனேன் என்ற சுழற்பந்துவீச்சாளரை இம்பேக்ட் வீரராக டெல்லி அணி களமிறக்கியது. இதில் அவர் 3 ஓவர் வீசி 13 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். இதே போன்று தமிழக அணி பந்துவீச்சாளர் நடராஜனுக்கு பதிலாக ஹரி நிசாந்த் என்ற பேட்ஸ்மேனை இம்பேக்ட் வீரராக மாற்றியது. எனினும் அவர் 36 பந்தில் 33 ரன்கள் எடுக்க தமிழக அணி தோல்வியை தழுவியது.

மற்ற அணிகள்
இதே போன்று மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணி சதம் விளாசிய படிக்கலுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபாலை இம்பேக்ட் வீரராக மாற்றியது. இதில் அவர் 3 ஓவர் வீசி 15 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். முதல் நாளே சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த விதி சில ரசிகர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











