
முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து
இந்திய தலைமை பயிற்சியாளர் தலைமையிலான பயிற்சியாளர்கள் இந்திய வீரர்களின் விததியாசமான மனநிலையைய சிறப்பாக எதிர்கொண்டு, அவர்களை சிறப்பாக கையாண்டு வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ சிங் தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி தலைமையில் வீரர்கள சிறபபாக விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளர். ஆயினும் பயிற்சயாளர்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

கேப்டன் பதவியை பிரித்தளிப்பது செட் ஆகாது
இதனிடையே, இங்கிலாந்தில் செயல்பட்டு வருவது போல இந்தியாவில் கேப்டன் பதவியை பிரித்தளிப்பது சரியாக வராது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இயான் மார்கன் மறும் ஜோ ரூட் ஆகியோர் தங்களுக்குள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் ஆனால், தன்னுடைய பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள கேப்டன் விராட் கோலி ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புகளை பகிர ஒப்புகொள்ள மாட்டார்
கேப்டன் பொறுப்பை பகிர்ந்தளிப்பது என்பது கேப்டனின் குணநலனை சார்ந்தது என்றும் கேப்டன் விராட் கோலி கம்பீரமான மனநிலையை கொண்டுள்ளவர் என்பதால் அவர் தன்னுடைய பொறுப்புகளை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

சிறப்பானது என கருத்து
ஆனால் கடந்த ஆண்டு உலக கோப்பை தொடர் முதல் பயிற்சியாளர் பொறுப்புகளை பிரித்து கொடுத்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம் என்றும் ஹுசைன் தெரித்துள்ளார். இதன்மூலம் அதிகப்படியான கவனம் செலுத்தி பயிற்சிகளை அவர்கள் வீரர்களுக்கு அளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications