என்ன நடந்தது?
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி, கேதார் ஜாதவ் ஜோடி மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்தது. அதுவும் கடைசி 10 ஓவர்களிலும் இவர்கள் இருவரும் பவுண்டரி அல்லது அதிக சிங்கிள் ஓட முயற்சிக்காமல் தடுப்பாட்டம் ஆடினர்.
டெஸ்ட் ஆட்டம்
ஜாதவ் முதலில் நிதானம் காட்டினாலும், இடையே சில பவுண்டரிகள் அடித்து ஆறுதல் அளித்தார். ஆனால், தோனி 45வது ஓவரில் ஆட்டமிழக்கும் வரையில் டெஸ்ட் போட்டி போல ஆடி வெறுப்பேற்றினார். இதனால், இந்திய அணி கடைசி நேரத்தில் கூட ரன் சேர்க்க முடியாமல் திணறியது.
குறைந்த ரன்கள்
தோனி 52 பந்துகளில் 28 ரன்களும், ஜாதவ் 68 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் இந்தியா போராடி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின்னும், தோனி - ஜாதவ் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.
சச்சின் விமர்சனம்
அவர்களின் நிதான ஆட்டத்தை சச்சினும் விமர்சித்துள்ளார். "பெரிய ஏமாற்றமாக இருந்தது. கேதார் ஜாதவ் - தோனி கூட்டணி எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அது மிகவும் நிதானமாக இருந்தது. நாம் 34 சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் வெறும் 119 ரன்கள் தான் எடுத்துள்ளோம் இந்த ஒரு ஏரியாவில் தான் நாம் சரியாக இல்லை. நேர்மறையான ஆட்டம் ஆடவில்லை" என்று தோனி ஜாதவ் குறித்து விமர்சித்தார் சச்சின்.
ஒரே டாட் பால்
விராட் கோலி ஆட்டமிழந்த 38வது ஓவர் முதல், தோனி ஆட்டமிழந்த 45வது ஓவர் வரை இந்தியா அதிக டாட் பால் விளையாடியதாக குறிப்பிட்டுள்ளார். தோனி பெயரை சொல்லாமல், இப்படி நாசூக்காக விமர்சித்துள்ளார் சச்சின்.
தோனி ஆடி இருக்கணும்
மேலும், ஜாதவ் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை அதிகம் பேட்டிங் செய்யும் வாய்ப்பு பெறாமல் இருந்தார். எனவே, அவருக்கு சிறிது அவகாசம் கொடுத்து போட்டியை தோனி தன் கையில் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. அதனால், ஜாதவ்வுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது என்றார் சச்சின். தோனியை மிகக் கடுமையாக சச்சின் விமர்சிப்பது இதுவே முதல் முறை!