
நடராஜன்
இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி மிரள வைத்தது. போட்டியின் ஐந்தாவது ஓவரை நடராஜன் வீசினார். தான் வீசிய முதல் ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை சாய்த்தார்.

விக்கெட்
டிஆர்சி ஷார்ட் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நடராஜனுக்கு கேப்டன் கோலி தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை. அவரை கடைசி ஓவர்களில் பயன்படுத்த வேண்டி திட்டமிட்டார்.

அடக்கம்
எனினும் ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க முடியாமல் அவ்வப்போது நடராஜன் ஓவர்களை பயன்படுத்தினார். மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அதிரடி ஆட்டம் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் நடராஜன் ஓவரில் மட்டும் அடக்கமாக ஆடினர்.

கட்டுக் கோப்பான பந்துவீச்சு
அவரது ஓவரில் பவுண்டரி அடிக்கவே முயற்சி செய்யவில்லை. நடராஜன் ஒரே ஒரு ஃபோர் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் 35 முதல் 51 ரன்கள் வரை வாரி இறைத்து இருந்தனர்.

நிரந்தர இடம்
தொடர்ந்து மூன்று போட்டிகளில் தன் முத்திரையை பதித்து மிரட்டி இருக்கிறார் நடராஜன். 3 சர்வதேச போட்டிகளில் 7 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். தனி ஆளாக ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணியையே மிரட்டி உள்ளார். அவர் இப்போதே இந்திய அணியின் நிரந்தர பந்துவீச்சாளராக மாறி இருப்பதாகவே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











