எங்கும் நீலம்
இந்தியா - ஆஸ்திரேலியா லீக் போட்டி துவங்கும் முன்பு அனைவரும் ஆச்சரியப்பட்ட விஷயம், மைதானத்தில் எங்கு பார்த்தாலும் இந்திய அணியின் நீல வண்ண ஜெர்சிக்கள் அணிந்தவர்கள் நிரம்பி இருந்தார்கள். மைதானம் முழுவதும் நீலமயமாக இருந்தது.
மஞ்சள் இல்லை
ஆஸ்திரேலிய ரசிகர்களை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்குமே காணவில்லை. ஆஸ்திரேலிய அணியின் உடையான மஞ்சள் நிற ஜெர்சிக்களை எங்குமே காண முடியவில்லை. இதை வைத்து இந்திய ரசிகர்கள் பெருமையடித்துக் கொண்டும், ஆஸ்திரேலிய அணியை கிண்டல் செய்தும் வந்தார்கள்.
மனம் நொந்த ஆஸி வீரர்
இது எப்போதும் நடப்பது தான். ஆனால், இந்த முறை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஸிலாட்டர் கூட மனம் நொந்து விட்டார். தான் வர்ணனை செய்வதை நிறுத்தி விட்டு, தங்கள் நாட்டு மஞ்சள் நிற ஜெர்ஸியை விநியோகிக்கப் போவதாக கூறினார்.
மைக்கேல் வாகன் பதிவு
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பரம எதிரியான இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு ஆஸ்திரேலிய அணிக்கு ரசிகர்களே இல்லை என குத்திக் காட்டியுள்ளார். அவரது பதிவு -
|
மொத்தம் 33 பேர்
"இதுவரை ஓவல் மைதானத்தில் 33 ஆஸ்திரேலிய ரசிகர்களை பார்த்தேன். ஆஸ்திரேலிய அணி மற்றும் அவர்களின் உதவியாளர்களையும் சேர்த்து.." என நக்கலாக கூறி, ஆஸ்திரேலியாவை கலாய்த்துள்ளார் மைக்கேல் வாகன்.
|
டிக்கெட் கிடைக்கலை
இதற்கு சில ஆஸ்திரேலியர்கள் பதிலும் கூறி இருக்கிறார்கள். ஒருவர் "எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. காசும் ரொம்ப அதிகமா இருக்கு" என்று கூறியுள்ளார்.
|
பதிலடி
மற்றொருவர், "ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு கிடையாது. அப்புறம் இது எங்களுக்கு மதமும் கிடையாது" என பதிலடி கொடுத்துள்ளார்.