
கேப்டன் ஆன ரஹானே
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் மோதி வருகிறது. முதல் டெஸ்டில் மட்டுமே கேப்டன் விராட் கோலி பங்கேற்றார். அதன் பின் அவர் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றார். அவருக்கு பதில் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

புகழ்ந்த ஆஸி. வீரர்கள்
முதல் டெஸ்டில் கோலி தலைமையில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையில் அசத்தலாக வென்றது. பலரும் ரஹானேவின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளினர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் அவரை குறிப்பிட்டு பாராட்டினர்.

உதாரணம்
முன்னாள் வீரர் இயான் சாப்பல், ரஹானே குறித்து கூறுகையில், அவர் இதற்கு முன் 2017இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கேப்டனாக செயல்பட்ட போட்டியை குறிப்பிட்டு உதாரணம் கூறி பாராட்டினார். கேப்டனாகவே இருக்கவே பிறந்தவர் என அவர் உச்சகட்டமாக புகழ்ந்தார்.

ஆச்சரியமாக இருக்காது
2017இல் தரம்சாலா டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாக செயல்பட்டதை பார்த்த அனைவர்க்கும் ரஹானே தவறே இல்லாமல் மெல்போர்ன் போட்டியில் கேப்டனாக செயல்பட்டது ஆச்சரியமாக இருக்காது என்றார். அந்தப் போட்டியில் தன்னை ஈர்த்த சம்பவம் பற்றியும் சாப்பல் கூறினார்.

அந்த திருப்பம்
தரம்சாலா போட்டியில் டேவிட் வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் 100 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்து இருந்தனர். அப்போது அறிமுக வீரரான குல்தீப் யாதவ்வை நம்பி பந்தை கொடுத்தார். அது தைரியமான முடிவு என நான் நினைத்தேன். அப்போது வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் என்றார்.

அமைதி
அதன் பின் ஆஸ்திரேலியா 5 விக்கெட்களை விரைவாக இழந்தது. அது கேப்டனாக ரஹானேவின் வெற்றி. அவர் தைரியமானவர், சாமர்த்தியமானவர். ஒரு தலைவராக அவருக்கு இந்த இரண்டை தாண்டியும் அவரிடம் சில குணங்கள் உள்ளது. அவர் மோசமான சூழலில் அமைதியாக இருக்கிறார் என்றார் சாப்பல்.


Click it and Unblock the Notifications











