
குவாரன்டைன் கட்டுப்பாடுகள்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலத்தை சேர்ந்த அந்த நகரில் தற்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு கடும் குவாரன்டைன் கட்டுப்பாடுகள் உள்ளது.

வெளியேறக் கூடாது
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு விதித்துள்ளது. அதன்படி, வீரர்கள் ஹோட்டல் அறையில் தாங்கள் தங்கி இருக்கும் தளத்தை விட்டு வெளியேறக் கூடாது என கூறப்படுகிறது. இதைத் தான் பிசிசிஐ தளர்த்துமாறு கூறி வருகிறது.

ஒப்புதல்
எந்த தளத்தில் இருந்தாலும் இந்திய வீரர்கள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் கோரி உள்ளது பிசிசிஐ. அதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாய் மொழியில் ஒப்புதல் அளித்துள்ளது.

வாக்குறுதி அளிக்க முடியாது
எனினும், அதை பிசிசிஐ ஏற்க மறுத்து, எழுத்துப்பூர்வமாக அதை எழுதி அளிக்குமாறு கோரி உள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பால் அப்படி வாக்குறுதி அளிக்க முடியாது. அரசு தான் இதில் முடிவெடுக்க வேண்டும். பிசிசிஐக்கு சாதகமாக இதில் முடிவு கிடைப்பது கடினம் தான்.

ஒப்புக் கொள்ளும்
எப்படியும் பிசிசிஐ கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட ஒப்புக் கொள்ளும் என்றே முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள். நேரடியாக ஒப்புக் கொள்ளாமல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அழுத்தத்தில் வைக்கவே பிசிசிஐ இவ்வாறு செய்து வருகிறது என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications