
இந்திய அணி நிலை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பல இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். கேப்டன் விராட் கோலி விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில், இளம் அறிமுக வீரர்களை நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.

காயம்
தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் காயத்தில் சிக்கி வந்தனர். இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, அஸ்வின், ஜடேஜா என கிட்டத்தட்ட இந்திய டெஸ்ட் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் காயத்தில் சிக்கி உள்ளனர்.

இரண்டு வீரர்கள் அறிமுகம்
இதனால், கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் என இரண்டு வீரர்களை அறிமுகம் செய்தது இந்திய அணி. ஷர்துல் தாக்குர் தன் முதல் டெஸ்ட் போட்டியில் சில நிமிடங்களிலேயே காயம் காரணமாக விலகி இருந்தார். எனவே, அவரும் அறிமுக வீரர் போலவே கருதப்பட்டார்.

அதிக வீரர்கள்
இதற்கு முன் 2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 18 வீரர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தனர். இந்த முறை 20 வீரர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 1996க்கு பின் ஒரே தொடரில் ஐந்து வீரர்களை அறிமுகம் செய்துள்ளது இந்திய அணி.


Click it and Unblock the Notifications