
நிதான பேட்ஸ்மேன்கள்
இந்திய அணியில் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி போன்ற பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன் எடுப்பவர்கள். ஒரே நாளில் 90 ஓவர்களில் இந்திய அணி 309 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் ஓவருக்கு 3.6 என்ற ரன் ரேட்டில் இந்தியா ரன் குவிக்க வேண்டும்.

விக்கெட்
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில், மிடில் ஆர்டரில் ஆடும் அந்த மூன்று வீரர்களை கொண்டு இந்த இலக்கை எட்ட முடியாது. மேலும், ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளித்து இந்தியா விக்கெட் இழக்காமல் இருப்பதே பெரிய போராட்டமாக இருக்கும்.

டிரா செய்யலாம்
இந்த நிலையில் இந்தியா இந்தப் போட்டியை டிரா செய்வது மட்டுமே கையில் இருக்கும் ஒரே வாய்ப்பு. இது போன்ற கடைசி நாள் ஆட்டத்தில் பெரும்பாலும் உணவு இடைவேளைக்கு முன்பு வரை விக்கெட் இழக்காமல் ஆடுவதே முக்கியம்.

ஜடேஜா இல்லை
இந்திய அணி 2 விக்கெட்கள் இழந்த நிலையில், விக்கெட் இழக்காமல் ஆடுவதே முக்கியம். இதை உணர்ந்து புஜாரா, ரஹானே நீண்ட நேரம் களத்தில் நீடித்து நிற்க வேண்டும். ஜடேஜா காயத்தால் பேட்டிங் செய்ய வருவது கடினமே. எனவே, இந்தியா டிரா செய்வதும் கடினமான காரியம் தான்.


Click it and Unblock the Notifications











