
ரிஷப் பண்ட் செயல்பாடு
ரிஷப் பண்ட் கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் மோசமாக ஆடி வந்தார். அவரது விக்கெட் கீப்பிங்கும் மோசமாக இருந்தது. இந்த நிலையில், அவரை டெஸ்ட் அணியில் மட்டுமே தக்க வைத்தது இந்திய அணி நிர்வாகம்.

அசத்தல் ஆட்டம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 97 மற்றும் 89* ரன்கள் குவித்து இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். மேலும், இந்த தொடரில் இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்த வீரரும் அவரே.

விக்கெட் கீப்பர்?
இந்த நிலையில், அவரை அணியில் எப்படியும் தக்க வைத்தே ஆக வேண்டும். இப்படிப்பட்ட மேட்ச் வின்னர் ஒருவரை அணியை விட்டு நீக்கி வைக்க முடியாது என்ற குரல்கள் எழத் துவங்கி உள்ளன. ஆனால், அவரது விக்கெட் கீப்பிங் இந்த முறையும் மோசமாக இருந்தது.

முழு நேர பேட்ஸ்மேன்
எனவே, அவரை முழு நேர பேட்ஸ்மேன் ஆக டெஸ்ட் அணி மட்டுமின்றி அனைத்து வித அணிகளிலும் ஆட வைக்க கேப்டன் கோலி திட்டமிட வேண்டும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே, அணியில் இடம் பிடிக்க பலர் காத்திருக்கும் நிலையில், கோலிக்கு சவாலை ஏற்படுத்தி இருக்கிறார் ரிஷப் பண்ட்.


Click it and Unblock the Notifications











