
தந்தை இறப்பு
முகமது சிராஜின் தந்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே இறந்தார். சிராஜ் டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டு அணியுடன் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்தார். அவர் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்றால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது என்ற நிலை இருந்தது.

அந்த முடிவு
அப்போது சிராஜ் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற ஆஸ்திரேலியாவிலேயே இருக்க முடிவு செய்தார். அவரது தந்தை நாட்டுக்காக கிரிக்கெட் ஆட வேண்டும் என பல முறை அவரிடம் கூறி இருந்தார். தன் தந்தையின் கனவை நிறைவேற்ற அவரது இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் இருந்தார் சிராஜ்.

வாய்ப்பு
அந்த கடினமான முடிவை அவர் எடுத்ததற்கு டெஸ்ட் தொடரின் போது பலன் கிடைத்தது. காயமடைந்த ஷமிக்கு பதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் வாய்ப்பு பெற்றார். அந்த டெஸ்டில் அவர் கட்டுக் கோப்பாக பந்து வீசியது கவனம் ஈர்த்தது.

முதல் விக்கெட்
அதன் பின் சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்றார். அந்த போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் கண் கலங்கினார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டையும் சிராஜ் தான் கைப்பற்றினார். டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி அவர் அசத்தினார்.


Click it and Unblock the Notifications