For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS: சுப்மன் கில் அருகே வந்த பாகிஸ்தான் ரசிகர்.. திடீரென கோஷமிட்டதால் தர்மசங்கடம்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு விரும்பத்தகாத அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அடிலெய்டு நகரில் சக வீரருடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அவரிடம் கைகுலுக்கிவிட்டு, முகத்திற்கு நேராக கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி, தொடரை சமன் செய்யும் நோக்கில் அடிலெய்டில் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற விருப்பப் பயிற்சி முகாமில் கேப்டன் சுப்மன் கில் கலந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, அவர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுடன் அடிலெய்டு நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்.

IND vs AUS Pakistan Zindabad Shouted at Shubman Gill s Face by Fan in Adelaide Captain Stays Calm

அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சுப்மன் கில்லை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் பேச வந்துள்ளார். கைகுலுக்குவதற்காக அவர் தனது கையை நீட்டியபோது, கில்லும் சற்றும் யோசிக்காமல் அவருடன் கைகுலுக்கினார். ஆனால், அடுத்த கணமே அந்த ரசிகர், கில்லின் முகத்திற்கு மிக அருகில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று ஆக்ரோஷமாகக் கத்தினார்.

இந்த எதிர்பாராத செயலால் சுப்மன் கில் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றவில்லை. கோபத்தையோ, அதிர்ச்சியையோ வெளிக்காட்டாமல், அமைதியாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கில்லின் மௌனம் தந்த பதிலடி

அந்த ரசிகரின் ஆத்திரமூட்டும் செயலுக்கு சுப்மன் கில் காட்டிய நிதானமும், அமைதியும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. எந்தவித சலனமும் இல்லாமல் அவர் நடந்து சென்றதை "அவரது மௌனமே தகுந்த பதிலாக இருந்தது" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு கேப்டனுக்குரிய முதிர்ச்சியுடன் அவர் இந்தச் சூழலைக் கையாண்டதாகப் பலரும் பாராட்டியுள்ளனர்.

கவனம் சிதறாமல் களத்தில் பதிலடி கொடுப்பாரா கில்?

புதிய ஒருநாள் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள 25 வயதான சுப்மன் கில்லுக்கு இந்தத் தொடர் மிகவும் சவாலானது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவருடன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா (8), விராட் கோலி (0) ஆகியோரும் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், அடிலெய்டில் இன்று நடைபெறும் போட்டி கில்லின் கேப்டன்சிக்கு ஒரு முக்கிய சோதனையாகப் பார்க்கப்படுகிறது. களத்திற்கு வெளியே ஏற்பட்ட இந்த விரும்பத்தகாத அனுபவம், அவரது ஆட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், தனது பேட் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே, விருப்பப் பயிற்சி முகாமில் கில் கலந்துகொள்ளாத நிலையில், ரோஹித் சர்மா மட்டும் பயிற்சியில் ஈடுபட்டு, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் மேற்பார்வையில் சுமார் 45 நிமிடங்கள் தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 23, 2025, 8:02 [IST]
Other articles published on Oct 23, 2025
English summary
IND vs AUS: Pakistan Slogan Shouted at Shubman Gill's Face by Fan in Adelaide; Captain Stays Calm
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+