முதல் டி20
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஜடேஜா சிறப்பாக ஆடி 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
ஜடேஜா காயம்
அவர் பேட்டிங் ஆடிய போது முதலில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அடுத்த சில பந்துகளில் அவரது ஹெல்மட்டில் பந்து தாக்கியது. அப்போது அவர் மீதமிருந்த பந்துகளை நன்றாகவே சந்தித்தார். எந்த சிக்கலும் இருந்ததாக தெரியவில்லை.
மாற்று வீரர்
எனினும், அவர் அடுத்து பந்துவீச வரவில்லை. அவருக்கு ஹெல்மட்டில் பந்து தாக்கியதால் அவர் சோர்வாக இருப்பதால், மூளை அழற்சி ஏற்பட்ட வீரர்களுக்கு மாற்று வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் பயன்படுத்தலாம் என்ற ஐசிசி விதிப்படி இந்திய அணி சாஹலை பந்துவீச்சின் போது பயன்படுத்தியது.
சர்ச்சை
சாஹல் ஆல்-ரவுண்டர் இல்லை. ஆனால், ஆல்-ரவுண்டர் ஜடேஜாவுக்கு மாற்றாக அவரை ஆட வைத்ததும், ஜடேஜாவுக்கு ஹெல்மட்டில் பந்து தாக்கிய போது மருத்துவ பரிசோதனை செய்யாததும் சர்ச்சை ஆனது. ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ரெப்ரீயுடன் இது குறித்து விவாதம் செய்தனர்.
ஜடேஜா நீக்கம்
இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டிக்கு முன் ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜடேஜா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ கூறி உள்ளது. எனவே, அவரை டி20 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து நீக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
உள்ளே வந்த இளம் வீரர்
ஜடேஜாவுக்கு பதில் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்குர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரை டி20 தொடரிலும் இந்தியா சேர்த்துள்ளது.
வாய்ப்பு கிடைக்குமா?
இந்திய அணியில் முதல் டி20 போட்டியில் நடராஜன், முகமது ஷமி, தீபக் சாஹர் வேகப் பந்துவீச்சில் இடம் பெற்றனர். இரண்டாவது போட்டியில் ஷமி அல்லது சாஹருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தாக்குர் அணியில் இடம் பெறக் கூடும்.