
சிறப்பு பிராத்தனை
சிட்னியில் இன்று நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு யாகங்கள்
இன்று அதிகாலை முதலே சென்னை, ஆமதாபாத், கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு யாகங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரக்கட்டணம் உயர்வு
இந்தப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளம்பர கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஒரு நிமிடத்திற்கு ரூ.1.5 கோடி
இன்றைய போட்டியின் போது 10 வினாடிகளுக்கு ரூ. 25 லட்சம் விளம்பரம் கட்டணம் ஆகும். அதாவது ஒரு நிமிட விளம்பரத்திற்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாயை விளம்பர கட்டணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன்று ஒருநாள் மட்டும் கட்டணமாக பெறுகிறது. பல நூறு கோடி ரூபாயை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சம்பாதித்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு இருமடங்கு
இந்திய அணி அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டால் நியூசிலாந்து-இந்திய அணிகளுக்கிடையயான இறுதிப் போட்டிக்கு இந்த கட்டணம் அப்படியே இருமடங்காக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.

இந்தியா – பாகிஸ்தான்
இதேபோல பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒளிபரப்பான நாளன்றும் இதேபோல ஒரு நிமிடத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் வசூலித்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனம். இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 6 மாநில மொழிகளிலும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகிறது.

கோடிகளில் புரளும் பணம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை பெற தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்கின்றன என்று ஏன் என்று இப்போது புரிந்திருக்குமே ரசிகர்களே!


Click it and Unblock the Notifications











