
ஓப்பனிங்
இன்னொரு ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆன நிலையில் சுப்மான் கில் மீது அதிக அழுத்தம் இருந்தது. ஆனால் சுப்மான் கில் மிகவும் நேர்த்தியாக ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய பவுலர்கள் இன்று கடைசி கட்டத்தில் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

ஆனால் என்ன
ஆனால் சுப்மான் கில் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மிகவும் நேர்த்தியாக ஆடினார். முக்கியமாக இன்று சுப்மான் கில் ஷாட்களை தேர்வு செய்த விதம். ஷார்ட் பந்துகளை அடித்த விதம் கவனம் ஈர்த்தது. தான் ஒரு நல்ல டெஸ்ட் ஓப்பனர் என்பதை சுப்மான் கில் நிரூபித்துள்ளார்.

எத்தனை
இதுவரை சுப்மான் கில் 28 ரன்கள்தான் இன்றைய ஆட்டத்தில் அடித்துள்ளார். ஆனால் இது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், கடினமான பவுலிங்கை எதிர்கொண்டு வந்த ரன்கள். இந்த நிலையில் அடுத்த வருடமும் இவர்தான் ஓப்பனிங் இறங்க வேண்டும். இந்திய டெஸ்ட் அணியில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை
சுப்மான் கில் இந்திய அணியின் எதிர்காலம். இவருக்கு அடுத்த வருடம் நடக்கும் இங்கிலாந்து, இலங்கை போன்ற தொடர்களில் எல்லாம் முழு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பிசிசிஐ அமைப்பும் இதை ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இவர் ஆடுவார்.

மயங்க்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறுவார். இதனால் சுப்மான் கில், ரோஹித் சர்மா இரண்டு பேரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மயங்க் அகர்வால் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











