அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே பெறாமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதை அண்டை நாட்டு ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மேலும் பல வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் இந்தியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் பல சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அரையிறுதியில் உருவாக்கப்பட்ட சர்ச்சை தான் இந்தியா ஆடுகளத்தை அவர்களுக்கு சாதகமாக மாற்றியது என்று கிளப்பி விட்டனர்.
