அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 241 இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் முதல் 10 ஓவர்களில் 80 ரன்கள் இந்தியா தொட்டாலும் அதன் பிறகு ஆடுகளம் மிகவும் தோய்வாக மாறியது.
இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க கடுமையாக தடுமாறினர். எவ்வளவு அடித்தாலும் பந்து நகரவே இல்லை. அதையும் மீறி அடித்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் சீறிப்பாய்ந்து பில்டிங்கை செய்து விடுகிறார்கள்.
