For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 2 வங்கதேச வீரர்களுக்கு என்ன நடந்தது? மூடி மறைக்கப்பட்ட மர்மம்.. நன்றி சொல்லி சமாளித்த கங்குலி!

Recommended Video

Bangladesh players affected due to delhi pollution | அந்த 2 வங்கதேச வீரர்களுக்கு என்ன நடந்தது?

டெல்லி : டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டி சுவாசிக்க முடியாத மோசமான காற்று மாசுக்கு இடையே நடந்து முடிந்தது.

அந்தப் போட்டியின் போது இரண்டு வங்கதேச வீரர்கள் காற்று மாசு காரணமாக ஏற்பட்ட உடல் பாதிப்பால், போட்டியின் இடையே வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த அளவு உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், இந்த விஷயம் இரு அணிகளாலும் பெரிதுபடுத்தப்படாமல் மறைக்கப்பட்டு இருக்கிறது.

கங்குலி நன்றி

கங்குலி நன்றி

பிசிசிஐ தலைவர் கங்குலி இந்தப் போட்டியின் பின் இரு அணிகளுக்கும் நன்றி கூறி பதிவிட்டார். அது கூட இந்த மறைக்கப்பட்ட இந்த விஷயத்துக்காக தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடும் காற்று மாசு

கடும் காற்று மாசு

டெல்லியில் தீபாவளி பட்டாசு புகை மற்றும் அருகாமையில் இருக்கும் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் விவசாய நிலங்களில் எரிக்கப்பட்ட விவசாய கழிவுகளால் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டது. காற்று தரத்தை அளக்கும் கருவியில் இருக்கும் 999 என்ற அதிகபட்ச அளவை தாண்டி காற்று மாசு டெல்லியை தாக்கியது.

இடம் மாற்ற கோரிக்கை

இடம் மாற்ற கோரிக்கை

இந்த நிலையில், 9 - வங்கதேசம் முதல் டி20 போட்டி டெல்லியில் நடத்த வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பினர். ஆனால், இந்த போட்டி பல வாரங்கள் முன்பு முடிவு செய்யப்பட்டது என்பதால் சிக்கல் இடத்தை கடைசி நேரத்தில் மாற்றுவதில் சிக்கல் இருந்தது.

பிசிசிஐ மறுப்பு

பிசிசிஐ மறுப்பு

பிசிசிஐ போட்டி டெல்லியில் தான் நடக்கும் என்பதில் உறுதியாக இருந்தது. முன்னாள் வீரர் கம்பீர் முதல் பலரும் இந்த நேரத்தில் விளையாட்டு முக்கியமா? வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் கூறினர்.

முகமூடி அணிந்து பயிற்சி

முகமூடி அணிந்து பயிற்சி

இதற்கிடையே டெல்லி வந்த வங்கதேச வீரர்கள் முகமூடி அணிந்து பயிற்சி மேற்கொண்டனர். கண் எரிச்சல், தொண்டை வறட்சி போன்ற பாதிப்புகளால் வங்கதேச வீரர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும், யாரும் புகார் கூறவில்லை.

சர்ச்சை இல்லாத போட்டி

சர்ச்சை இல்லாத போட்டி

முதல் டி20 போட்டி காற்று மாசு குறித்த எந்த சர்ச்சையும் இல்லாமல் நடந்து முடிந்தது. இரு அணி வீரர்களும் முகமூடி அணியாமல் தான் ஆடினார்கள். போட்டிக்கு முன்னதாக டெல்லியில் சில அடி தூரத்தில் நடப்பதை பார்க்க முடியாத அளவு புகைமண்டலமாக இருந்தது. அதையும் மீறி போட்டி நடந்து முடிந்தது.

இரண்டு வீரர்கள் பாதிப்பு

இரண்டு வீரர்கள் பாதிப்பு

ஆனால், போட்டியின் இடையே மோசமான சில சம்பவங்கள் நடந்துள்ளது. இரண்டு வங்கதேச வீரர்கள் போட்டியின் இடையே கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, வாந்தி எடுத்துள்ளனர். அதில் ஒருவர் சௌம்யா சர்க்கார் என தெரிய வந்துள்ளது.

வங்கதேசம் முழு ஒத்துழைப்பு

வங்கதேசம் முழு ஒத்துழைப்பு

ஆனால், இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாத வங்கதேச அணி போட்டியின் போதும், போட்டிக்கு பின்பும் இது பற்றி வெளி உலகுக்கு தெரியாத வகையில் அமைதி காத்தது. இந்திய அணிக்கும், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் மதிப்பளித்தே அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டிருப்பார்கள் என கருதப்படுகிறது.

இது தான் முதல்முறை

இதையடுத்து தான் பிசிசிஐ தலைவர் கங்குலி போட்டிக்கு பின் ட்விட்டரில் இந்திய - வங்கதேச அணிகள், மிக மோசமான சூழ்நிலையில் போட்டியில் ஆடியதற்கு நன்றி தெரிவித்து சமாளித்தார். பிசிசிஐ தலைவர் ஒருவர் டெல்லியில் விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது என ஒப்புக் கொண்டது இதுவே முதல்முறை.

போட்டியில் தோல்வி

போட்டியில் தோல்வி

இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 148 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹீம் சிறப்பாக ஆடி 60 ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெறச் செய்தார்.

Story first published: Wednesday, November 6, 2019, 19:57 [IST]
Other articles published on Nov 6, 2019
English summary
IND vs BAN : 2 Bangladesh players affected severely due to air pollution says reports. Ganguly thanked both the teams after the match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X