For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உச்சகட்ட கொடுமை! இப்ப மேட்ச் நடத்தியே ஆகணுமா? சிரமப்பட்ட வீரர்கள்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்!

Recommended Video

IND vs BAN : Fans not happy as the match starts amidst severe air pollution

டெல்லி : டெல்லியில் கடும் காற்று மாசு உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. உலகிலேயே எந்த நகரத்திலும் இல்லாத அளவு கொடுமையான நிலையில் இருக்கிறது தலைநகர் டெல்லி.

இந்த நிலையில் அங்கே டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போட்டியின் இடையே வீரர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பிசிசிஐ, டெல்லியில் மோசமான காற்று மாசுக்கு இடையே போட்டி நடத்தி வருவதை திட்டியும், விமர்சனம் செய்தும் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தோனி, கோலி சாதனைகளை உடைத்து தெறிக்கவிட்ட கேப்டன்.. ஒரே ஓவரில் நடந்த சம்பவம்!தோனி, கோலி சாதனைகளை உடைத்து தெறிக்கவிட்ட கேப்டன்.. ஒரே ஓவரில் நடந்த சம்பவம்!

காற்று மாசு நிலைமை

காற்று மாசு நிலைமை

காற்று தரத்தின் அளவீட்டின் படி 200க்கும் கீழ் காற்று மாசு இருந்தால் அது சிறப்பான நிலை. 300க்கு மேல் இருந்தால் மிக மோசம், 400க்கு மேல் இருந்தால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் சில இடங்களில் 999 என்ற அளவுக்கு காற்று மாசு உள்ளது.

உடல் உபாதைகள்

உடல் உபாதைகள்

ஆம், 999 என்ற உச்சத்தை எட்டி இருக்கிறது காற்று மாசு. சராசரியான அளவு 500-ஐ எட்டி உள்ளது. எப்படி பார்த்தாலும் இது எந்த உயிரனத்துக்கும் கடும் உடல் உபாதைகளை அளிக்கும். மூச்சு விடவே சிரமமான நிலை தான் டெல்லியில் உள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் பள்ளிகளுக்கு நவம்பர் 5 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு முகமூடி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் என்ன செய்வது என விவாதித்து வருகின்றன.

கிரிக்கெட் போட்டி தேவையா?

கிரிக்கெட் போட்டி தேவையா?

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிசிசிஐ தீபாவளியை அடுத்து காற்று மாசு மோசமாக இருக்கும் எனத் தெரிந்தே டெல்லியில் இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டியை தீபாவளிக்கு அடுத்த வாரம் திட்டமிட்டு இருந்தது. பலரும் கிரிக்கெட் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கூறினாலும் பிசிசிஐ அதற்கு மறுத்து விட்டது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

போட்டி நாளன்று காலை முதல் புகையும், பனியும் சேர்ந்து சில அடி தூரத்தில் இருப்பதை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்படி இருந்தும் போட்டி நடைபெற்றது. பிசிசிஐ-யின் பிடிவாதத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவற்றில் சில -

செர்னோபில் போல..

செர்னோபில் போன்ற ஒரு மனிதத் தன்மை அற்ற இடத்தில் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. வங்கதேசத்தை விட வளர்ந்த நாடாக இருந்தால், இந்த இடத்தில் ஆட மாட்டோம் என மறுத்து இருப்பார்கள் என கூறி இருக்கிறார்.

கண்ணாமூச்சி ஆட்டம்

வங்கதேசம், இந்திய அணியுடன் கண்ணாமூச்சி ஆட வந்துள்ளது என புகை + பனிமூட்டத்துக்கு இடையே நடக்கும் டி20 போட்டியை கிண்டல் செய்துள்ளார்.

மொபைல் போன்

மக்கள் மைதானத்துக்கு வந்தாலும் போட்டியை மொபைல் போனில் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என கிண்டல் அடித்து, காற்று மாசு மற்றும் புகைமூட்டம் குறித்து கூறி இருக்கிறார்.

மூச்சு விட சிரமம்

சாஹல் மற்றும் க்ருனால் பண்டியா மூச்சு விட சிரமப்படும் காட்சிகளை குறிப்பிட்டு ஒருவர் வீரர்களின் உடல்நலத்தில் விளையாடக் கூடாது. இந்தப் போட்டியை ரத்து செய்யுங்கள் என கூறி இருக்கிறார்.

கேட்ச் நழுவல்

க்ருனால் பண்டியா முக்கியமான நேரத்தில் கேட்ச்சை கோட்டை விட்டார். அதைப் பார்த்த ஒருவர் அவர் டெல்லி காற்று மாசு காரணமாகவே க்ருனால் பண்டியா கேட்ச்சை நழுவ விட்டார் என கூறி இருக்கிறார்.

Story first published: Sunday, November 3, 2019, 23:08 [IST]
Other articles published on Nov 3, 2019
English summary
IND vs BAN : Fans not happy as the match starts amidst severe air pollution
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X