
முதல் போட்டியில் சொதப்பல்
வங்கதேச அணிக்கு முன், இந்தியா, நியூசிலாந்து அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் தோனி உட்பட முக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடினர். இதனால், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மிரள வைத்த தோனி
இந்த நிலையில், 5வது விக்கெட்டுக்கு ராகுலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார் தோனி. ராகுல் சதம் அடித்து வெளியேறிய பின்னும், தொடர்ந்து அதிரடியாக ஆடிய தோனி, 74 பந்துகளில் சதம் அடித்து மிரள வைத்தார்.

ஐபிஎல் பார்ம்
அதிலும், இந்தப் போட்டியில் சிக்ஸர்களாக அடித்து தெறிக்கவிட்ட தோனி, தன் சதத்தையும் சிக்ஸர் அடித்துதான் நிறைவு செய்தார். ஐபிஎல் தொடரில் கலக்கிய தோனி அதே பார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பழைய தோனி
பின்வரிசையில் பேட்டிங் செய்யும் தோனி சதம் அடிப்பதே அபூர்வம் என்று ஆகிவிட்ட நிலையில், சிக்ஸர் அடித்து அவர் தன் சதத்தை நிறைவு செய்தது, இந்திய ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

நீண்ட நேரம் பேட்டிங்
தோனி இந்தப் போட்டியில் ஏழு சிக்ஸர், எட்டு ஃபோர் அடித்தார் 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். 23வது ஓவரில் களமிறங்கிய தோனி, 50வது ஓவரின் 2வது பந்து வரை களத்தில் நின்றார். தோனியின் அதிரடியால் இந்தியா 50 ஓவர்களில் 359 ரன்களை எட்டியது.


Click it and Unblock the Notifications