ரிஷப் பண்ட் ஆட வேண்டும்
விஜய் ஷங்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் எதிர்பார்த்ததை விட அபாரமாக செயல்பட்டார். எனினும், அந்தப் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. குறைந்த ரன்களே எடுத்து, தன் விக்கெட்டை இழந்து வந்தார். அதனால், விஜய் ஷங்கரை அணியின் இருந்து நீக்கி விட்டு, ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு
எனினும், விஜய் ஷங்கருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க கேப்டன் கோலி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மிக முக்கியமான போட்டி ஆகும். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், நேரடியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதோடு, இந்தியா உலகக்கோப்பை லீக் சுற்றில் தோல்வியே அடையாத அணி என்ற பெருமையையும் பெறும்.
கோலி பேட்டி
கோலி பேட்டி அளித்த போது, கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர் அடிக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். விஜய் ஷங்கர் விரைவில் பெரிய அளவில் ரன் குவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். கோலி இப்படி பேசியதன் மூலம், விஜய் ஷங்கர் இங்கிலாந்து போட்டியில் வாய்ப்பு பெற உள்ளார் என கருதப்படுகிறது.
என்ன காரணம்?
விஜய் ஷங்கர் சரியாக ஆடாத நிலையிலும், கேப்டன் கோலி தொடர்ந்து வாய்ப்பு அளித்தால், அதற்கு முக்கிய காரணம், வெற்றி பெற்ற அணியை அவர் மாற்ற விரும்பவில்லை என்பதே. விஜய் ஷங்கர் சரியாக ஆடாவிட்டாலும், இந்திய அணி அவர் ஆடிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.