For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சந்தோஷத்த கெடுத்துட்டாங்களே...3வது போட்டிக்காக காத்திருந்த ரசிகர்கள்...திடீர் அறிவிப்பால் சோகம்

அகமதாபாத்: இங்கிலாந்து - இந்தியா இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் குஜராத் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள திடீர் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இரு அணிகளும் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள 3 போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என குஜராத் மாநில கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

போட்டி

போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இத்தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கும் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள போட்டிகளுக்கும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மீதமுள்ள டி20 போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அம்மாநில கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும். அதே போல் அன்பளிப்பாக டிக்கெட் பெறப்பட்டவர்கள் போட்டியை காண வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியும் ரசிகர்கள் இன்றி சென்னையில் நடைபெற்றது. ஆனால் முடிவில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் 3வது டி20யில் இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல் வரவிருக்கும் ஐபிஎல் போட்டியும் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 16, 2021, 15:06 [IST]
Other articles published on Mar 16, 2021
English summary
GCA Makes a important Decision on remaining t20's between india and england due to Rise of COVID19 Cases
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+