மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் தொடரின் போது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அணிக்கு வலுவான ஊக்கமும் ஆதரவும் அளித்ததாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கருண் நாயர் பாராட்டினார். ஆண்டர்சன்-சச்சின் தொடர், சுப்மன் கில் தலைமையில் இந்தியாவுக்கு மாற்று கட்டமாக அமைந்தது.
ஏனெனில் பல மூத்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்று சொந்த மண்ணில் தோல்வியடைந்து. 12 ஆண்டு கால வெற்றிகரமான பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-3 என்று தோல்வியடைந்த பிறகு, இந்தியா இங்கிலாந்தில் 2-2 என்று கடுமையாக போராடி டிரா செய்தது.

தொடரின் தொடக்கத்திலிருந்தே அணியை முதலிடத்தில் வைப்பது மற்றும் இங்கிலாந்தை அவர்களது மண்ணில் வீழ்த்துவது தான் குறிக்கோளாக இருந்ததாக நாயர் தெரிவித்தார். இந்த தொடரில் கருண் நாயர், எட்டு போட்டிகளில் 205 ரன்கள், 25.62 சராசரியுடன், ஒரு அரைசதம் மட்டுமே பெற்றார்.
எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய கருண் நாயர், வலுவான உள்நாட்டு சீசனைத் தொடர்ந்து வந்தாலும், 30 மற்றும் 40 ரன்களை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் தடுமாறினார். இது குறித்து பேசிய அவர், "தொடரின் முழு குறிக்கோள், ஒரே அணியாக ஏதாவது சிறப்பு செய்வது தான்.
முதல் நாளிலிருந்தே இந்த செய்தி கம்பீரிடமிருந்து வருவது உண்மையில் ஊக்கமளித்தது. தொடரின் முன்னேற்றத்தில் அனைவரும் இதை கவனித்திருப்பார்கள். கவுதி பாய் எங்களுக்கு நிறைய ஊக்கமும் ஆதரவும் அளித்தவர். எனக்கு நம்பிக்கையை அளித்து. வெளியே சென்று எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் உண்மையில் உதவினார்.
எனவே, முழு கவனமும், நான் அறிந்த விதத்தில் ஆடுவது, எந்த சூழ்நிலையிலும் அணிக்காக விளையாடுவது தான்," என்று கருண் நாயர் தெரிவித்தார்.வரவிருக்கும் உள்நாட்டு தொடர்களில் இந்திய டெஸ்ட் அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கிறது. அதற்கு முன், இந்திய அணி 2025 ஆசியக் கோப்பையில், செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடுகிறது.