சென்னை : அஸ்வினுக்கு சீனியர்களை மதிக்க தெரியாது என்று முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ள ட்வீட்கள் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
”அஸ்வின் ஒரு சுயநல கிரிக்கெட் வீரர்” என்று காட்டமாக விமர்சித்தவர் முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன். SENA நாடுகளில் அஸ்வின் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்று பாருங்கள், தோனி மட்டும் இல்லையென்றால் அஸ்வின் இந்திய அணிக்குள் வருவதற்கு கூடுதல் காலம் எடுத்திருக்கும். நன்றாக விளையாடிய ஹர்பஜன் கூடுதல் காலம் இந்திய அணியில் இருந்திருப்பார் என்று விமர்சித்திருந்தார்.
