IND vs ENG: முட்டாள் தனமான முடிவு.. விளையாடுறீங்களா? கம்பீரை சாடிய சஞ்சய் மஞ்சுரேக்கர்
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை சேர்த்த இந்திய அணியின் முடிவை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு வைபவ் சூர்யவன்ஷியை கொண்டு வந்ததற்காக இந்திய அணியை மஞ்ச்ரேக்கர் சாடியுள்ளார்.
15 வயதான இளம் வீரர் சூர்யவன்ஷி தேசிய அணியில் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய மஞ்ச்ரேக்கர், சாம்சனுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும், இல்லையெனில் இந்த முடிவில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், சஞ்சு சாம்சனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற கேரளா நட்சத்திர வீரரான சாம்சன் நீக்கப்பட்டது, அணியில் இடம்பிடிப்பதற்கான கடுமையான போட்டியை காட்டுகிறதா என்று ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்கப்பட்டபோது, அவரும் அதை ஒப்புக்கொண்டார். சாம்சனுக்குப் பதிலாக நேரடியாக களமிறங்கிய சூர்யவன்ஷி, மற்ற பேட்டர்களைப் போலவே ஓல்ட் ட்ராஃபோர்டின் பவுன்ஸ் பிட்ச்சில் தடுமாறி, 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
"வைபவ் இந்திய உடையில் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று மஞ்ச்ரேக்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "ஆனால் சாம்சனுக்கு என்ன நடந்தது? நீக்கப்பட்டாரா?? விளையாடுகிறீர்களா! இல்லை, அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அது காயம் என்றே நம்புவோம். இல்லையெனில் இது மிகவும் விசித்திரமான தேர்வாகும். வைபவை அணியில் சேர்க்க விரும்பியிருந்தால், சாம்சனை எளிதாக 3-வது இடத்தில் விளையாட வைத்திருந்திருக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாம்சனை மூன்றாவது இடத்தில் களம் இறக்கலாம். ஐபிஎல் தொடரில் அவர் பெரும்பாலும் இந்த இடத்தில்தான் விளையாடியுள்ளார், 2025-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சூர்யவன்ஷி அறிமுகமானபோதும் இதே நிலைதான் இருந்தது. ஒரு மிடில் ஆர்டர் பேட்டரை நீக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கும். இது மற்றொரு சிக்கலை உருவாக்கியிருக்கும். ஏனெனில் சாம்சனைப் போலவே இஷான் கிஷனும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்திருக்கக் கூடும்.
மற்றொரு வாய்ப்பாக, இந்த ஆண்டு முழுவதும் சுமாரான ஃபார்மில் இருக்கும் திலக் வர்மாவை நீக்கியிருக்கலாம். ஆனால், அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதாலும், அவர் ஒரு ஃபினிஷராக விளையாட முடியும் என்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாலும், அணி நிர்வாகம் தனக்குத்தானே கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications

