For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காயம் அடைந்தது போல் நடித்தாரா ரிஷப் பண்ட்? டைம் அவுட் வழங்கி இருக்கனும்.. இங்கி.வீரர் சர்ச்சை பேச்சு

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பேட்டிக் செய்து கொண்டிருந்தபோது, பந்து காலில் தாக்கி அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து வலியால் துடித்த அவர் போட்டியிலிருந்து விலகினார். அப்போது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரிஷப் பண்ட் ஆறு வாரம் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் விக்கெட்டுகள் வீழ்ந்து தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். அப்போது அவரால் நடக்கக்கூட முடியவில்லை. மாடிப்படியில் இருந்து மெதுவாக தாங்கி தாங்கி இறங்கி வந்த அவர் கடும் வலியையும் மீறி களத்திற்கு வந்து பேட்டிங் செய்து அரை சதம் கடந்தார்.

Rishabh Pant Injury

பேட்டிங் மூலம் இந்திய அணி 350 ரன்கள் கடந்தது. இந்த நிலையில் இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் லயார்ட், கிண்டல் அடித்து அவரை சாடி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இது குறித்து பேசிய அவர், நான் இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகின்றேன்.

ஒருமுறை ஆண்டி ரோபட்ஸ் பந்து வீச்சில் என்னுடைய தாவ கட்டை உடைந்தது. என்னால்பேட்டிங் செய்யவே முடியவில்லை. ஒருமுறை கைவிரல் உடைந்த நிலையில் நான் பேட்டிங் செய்தது நினைவுக்கு வருகிறது. ரிஷப் பண்டும் வலியால் அவதிப்பட்டார் என்று நினைக்கின்றேன். எனினும் அதையும் மீறி அவர் களத்திற்கு வந்து விளையாடினார். ஆனால் சிலர் பண்ட் விளையாடியதை கிண்டல் செய்தார்கள்.

இந்த காயத்தை அவர் நன்றாக அவருக்கு சாதகமாக பயன்படுத்தி ரசிகர்கள் ஆதரவை தேடுகிறார் என்றும் அவருடைய காயம் பெரிய அளவு இருந்திருக்காது என்றும் கூறினார்கள். மேலும் சிலர் அவர் மாடிப்படியில் இருந்து மெதுவாக இறங்கி வந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி அவர் களத்திற்கு வந்ததால் அவருக்கு டைம் அவுட் வழங்கி இருக்க வேண்டும் என்றும் சிலர் பேசினார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லயாட் கூறியிருக்கின்றார்.

இதேபோன்று ரன் ஓட முடியவில்லை என்பதற்காக ரன்னர்களை வைக்கும் முறைக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஆனால் அதே சமயம் ஒரு வீரருக்கு வெளியில் தெரியும் அளவுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் அவருக்கு ஓய்வு வழங்கிவிட்டு அவரைப் போன்ற மாற்று வீரர்கள் அணியில் சேர்க்க வேண்டும் என்றும் டேவிட் லயாட் கூறி இருந்தார்.

Story first published: Saturday, July 26, 2025, 12:19 [IST]
Other articles published on Jul 26, 2025
English summary
Ind vs Eng- Rishabh Pant Injury was trolled by former England cricketer David Lyold
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+