மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கில், லார்ட்ஸில் நடந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 16 மற்றும் 6 ரன்களுடன் வெளியேறினார்.
இந்தியா மூன்றாவது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியது. மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டுக்கு இடையிலான எட்டு நாள் இடைவெளி கில்லுக்கு பயனளிக்கலாம் என்று மஞ்ச்ரேக்கர் கூறினார்.

இது குறித்து பேசிய அவர், "கில்லுக்கு தனது ஃபார்மை தொடர்ந்து கொண்டு செல்லும் திறன் உள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த இடைவெளியில், ஒருவேளை சமீபத்திய மோதல் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் தந்தையுடன் சில உரையாடல்கள் நடத்தி இருக்கலாம். அவர் தனது கேப்டன்சி, ஃபீல்டிங், தந்திரங்கள் மற்றும் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
கில், அவ்வாறு செய்தால், ஒரு காலத்தில் இயங்கிய ரன் குவிக்கும் இயந்திரம் நன்கு எண்ணெய் போடப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்," இந்தியாவின் வெற்றிக்கு கில்லின் பங்கு முக்கியமானது. ஆனால் இந்தியா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸில் கில்லிடமிருந்து பேட்டிங்கில் எந்த பங்களிப்பும் இல்லை என்பதைப் பற்றி சிந்திக்கும்.
இருப்பினும், இந்தியாவின் பேட்டிங் வரிசை இன்னும் இங்கிலாந்தை சவால் விட முடிந்தது. எனவே, இது ஒரு நல்ல பாடம். நாம் முற்றிலும் கில்லைச் சார்ந்து இல்லை," என்று மஞ்ச்ரேக்கர் மேலும் கூறினார்.நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் மிகச்சிறந்த வீரராக உள்ளார். கேப்டன்சி பொறுப்பேற்ற பிறகு, 25 வயதான இவர் தனது வாழ்க்கையில் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.
மூன்று போட்டிகளில் 607 ரன்களுடன் ரன் எடுத்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் தொடரை லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் 147 ரன்களுடன் அற்புதமாகத் தொடங்கினார், பின்னர் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இரண்டு இன்னிங்ஸ்களில் 269 மற்றும் 161 ரன்கள் என்ற அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடினார். இந்திய கேப்டன் மீண்டும் எழுச்சி பெறுவார் என்றும், 4வது டெஸ்டில் வென்று இந்தியா தொடரை சமன் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.