Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“15 ஓவர் வரை ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமா போச்சு அப்புறம்..”.. தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் தோல்விக்கு காரணமாக ஒரு குறிப்பிட்ட ஓவரை சுட்டிக் காட்டி புலம்பி இருக்கிறார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். மேலும், கேப்டனாக தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது பற்றியும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. பின்னர் இங்கிலாந்து 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வென்றது. 16 ஓவர்கள் வரை இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில், ரவி பிஷ்னோய் வீசிய 17-வது ஓவரில் ஜேக்கப் பெத்தேல் 29 ரன்களை (3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி, 2 நோ-பால்கள்) விளாசியதே இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

IND vs ENG Shreyas Iyer Reflects on T20I Loss to England Points out 17th Over

போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "போட்டி எங்கு கைநழுவிச் சென்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தனிப்பட்ட முறையில் எந்த ஒரு வீரரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. 15 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்து பக்கம் திரும்பியது. ரவி பிஷ்னோய் முதல் ஓவரில் வீசிய நோ-பாலுக்குப் பிறகு மீண்டு வருவார் என்று நினைத்தேன். ஆனால் 17-வது ஓவரில் அவர் அடுத்தடுத்து வீசிய நோ-பால்கள் எங்களைப் பாதித்துவிட்டன. இதிலிருந்து அவர் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்ரேயாஸ், "பந்து சற்று எழும்பி வந்த இந்த ஆடுகளத்தில் 190 ரன்கள் என்பது ஒரு சிறந்த ஸ்கோர். கடைசி ஓவரில் திலக் வர்மா அடித்த 20 ரன்கள் எங்களுக்கு வலுவான ஸ்கோரைத் தந்தது. இங்கிலாந்து பேட்டர் ஜேக்கப் பெத்தேல் மிக நேர்த்தியாகவும், பதற்றமின்றியும் விளையாடினார். 13-வது ஓவரில் சாம் கர்ரன் ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே துல்லியமாகப் பந்துவீசி எங்களது இடதுகை பேட்டர்களுக்கு இடம் தராமல் தடுத்தது அவர்களது சிறந்த திட்டமிடலைக் காட்டியது" என்று கூறினார்.

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்று அறிமுகம் குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ், "அவர் பயமின்றி விளையாடும் குணம் கொண்டவர். நெட் பயிற்சியில் அவர் விளையாடும் விதமே அசாத்தியமானது. கடந்த சில மாதங்களாக அவர் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் பதற்றமடையவில்லை. அவரது இந்த அறிமுகம் மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.

“நண்பன்” தினேஷ் கார்த்திக் பற்றி பேசிய முரளி விஜய்.. ரசிகர்கள் கொந்தளிப்பு.. என்ன நடந்தது?

“நண்பன்” தினேஷ் கார்த்திக் பற்றி பேசிய முரளி விஜய்.. ரசிகர்கள் கொந்தளிப்பு.. என்ன நடந்தது?

கேப்டனாக தொடர் தோல்விகளை சந்தித்து வருவது பற்றி பேசிய ஸ்ரேயாஸ், "கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து தோற்றிருப்பது வருத்தமளித்தாலும், நாம் வீழ்ச்சியின் அடிமட்டத்திற்கு வந்துவிட்டோம். இனிமேல் இங்கிருந்து வெற்றிப் பாதைக்குத் திரும்புவது மட்டும்தான் எங்களது ஒரே வழி" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

“இந்தியா தோற்க காரணமே இவர்தான்”.. ரவி பிஷ்னோய் செய்த செயல்.. கொந்தளித்த ரசிகர்கள்.. மோசமான சாதனை

“இந்தியா தோற்க காரணமே இவர்தான்”.. ரவி பிஷ்னோய் செய்த செயல்.. கொந்தளித்த ரசிகர்கள்.. மோசமான சாதனை
Story first published: Sunday, July 5, 2026, 7:40 [IST]
Other articles published on Jul 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+